Thursday, September 24, 2009

கவிதை ஒன்று...


புணர்ந்து எறிந்த
பாலிதீன் பைகள்
பூமியின்
சுவாசத் துளைகள் அடைக்கும்

சுருங்கிய தூரம்
அடர் குளிர், வாகனப்புகை
காற்றில் விஷம் தடவி
விருந்து சமைக்கும்

உடைகளில் கதறும்
வர்ணங்கள்
ரத்த நாளங்களில்
அமிலம் ஏற்றும்

சுரண்டிய படுகைகள்
கிச்சு கிச்சு தாம்பாளம்
விளையாட்டில்
வருங்காலத்தை புதைக்கும்

சமூக அக்கறைக்
கவிதைகள் பக்கம் பக்கமாய்...
காகிதங்களில்
தூக்கிலிட்டு தொங்கும்
மரங்கள்!

No comments:

Post a Comment