நானற்று..
என்னுடைய
கவிதைகளில்
நானில்லாமல்
இருக்க
எப்போதும் மெனக்கெடுகிறேன்….
யாருடைய
வரிகளையோ
தெரிவு செய்து
அதை அடுக்கி உயர
கோபுரமாய் ஆக்குகிறேன்
பிறர்
உணர்வுகளில்
முலாம் தடவி
அவைகளை
நெட்டி பொம்மைகளாய்
நிறுவுகிறேன்
சொற்களின்
வீர்யத்தை, வீச்சைக் குறைத்து
என் வர்னங்களை
முற்றிலுமாக அழிக்கிறேன்
சரியாமல் இருக்க
உங்களின்
சுவாரசியங்களை
அனுபவங்களை
வஜ்ரமாய்க் கொண்டு
உறுதி செய்கிறேன்
கவனமாய்
செய்தாலும்
என் கைரேகைகள்
மிச்சமாகின்றன..
இந்த கவிதையிலும் கூட
தாம்பத்தியம்
9 years ago
No comments:
Post a Comment